கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனி ஆட்சியர் அலுவலக முதல் தளம் மூடல்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதல் தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலக அறைகள் மூடப்பட்டன.

News image
Updated On :21 ஜூன் 2020, 12:15 pm

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதல் தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலக அறைகள் மூடப்பட்டன.

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா கட்டுப்பாட்டு அறை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் செயல்படும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக அறை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலக அறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலக அறைகள் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது.

முதல் தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் 3 நாட்களுக்கு மூடப்பட்டு, 2 மற்றும் 3- ம் தளத்தில் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு அறையில் தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்ட பயிற்சி மருத்துவருடன் சேர்ந்து பணியிலிருந்த அலுவலர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள ஆட்சியர் அறையில் உள் அலங்காரம் மற்றும் மராமத்துப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.