கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆண்டிபட்டியில் முடிதிருத்தும் மற்றும் சலவைத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கல்

ஆண்டிபட்டி ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும்,

News image
Updated On :14 மே 2020, 1:21 pm

DIN

ஆண்டிபட்டி ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான லோகிராஜன் வியாழக்கிழமை அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சியில் தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், முடிதிருத்தும், சலவைத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்பினை கிராமங்கள் தோறும் சென்று வழங்கினார். 

திம்மரசநாயக்கனூர், டி .சுப்புலாபுரம், ஏத்த கோவில், அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, பிச்சம்பட்டி, கோத்தலூத்து, கொத்தப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைத் தொகுப்பினை வழங்கினார். 

சமூக இடைவெளியுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜிகே .பாண்டியன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் பொன் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அக்ஷயா, அழகுமணி, சுப்புலட்சுமி தங்கையா, காளித்தாய் சென்றாயன், சண்முகம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் பிரபு, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அருண்மதி கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.