தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கோயில்களை விரைந்து திறக்கக்கோரி ஆண்டிபட்டியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கோயில்களை விரைந்து திறக்கக் கோரி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :26 மே 2020, 5:47 am

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கோயில்களை விரைந்து திறக்கக் கோரி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவில் வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎம் செல்வம் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தின்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டுள்ள கோவில்களை விரைந்து திறந்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் மூடப்பட்டுள்ள கோயில்களை சரிவர பராமரிக்காத இந்து அறநிலையத்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.