/

ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:12 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே அய்யனத்தேவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ்(42) கூலித்தொழிலாளி.இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளாா்.இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளாா்.இதனைகண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.