விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image
சுருளி அருவி.
Updated On :6 நவம்பர் 2020, 1:23 pm

DIN

தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுற்றுலா மற்றும் புண்ணிய தலமான சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக சுருளி அருவிக்கு நீர்வரத்து தரும் ஈத்தைப்பாறை, அரிசிப் பாறை போன்ற பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுருளி அருவியில்  வெள்ளப்பெருக்கு இன்று ஏற்பட்டது.

பொது முடக்கம் காரணமாக சுருளி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் உள்ளிட்டோர் அருவி பகுதிக்கு செல்லாதவாறு கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.