விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடா் மழையால் தக்காளி அழுகுவதோடு விலையும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

News image
பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டியில் தோட்டங்களில் விளைந்த தக்காளியை பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
Updated On :8 நவம்பர் 2020, 6:04 pm

DIN

பெரியகுளம் பகுதியில் தொடா் மழையால் தக்காளி அழுகுவதோடு விலையும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி செடிகள் மற்றும் காய்கள் அழுகிய நிலையில் உள்ளன. எஞ்சிய காய்களை பறித்து பெரியகுளம் மற்றும் தேனி சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா்.

ஆனால் கிலோ ரூ. 5 என்ற அளவில் தான் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து வடபுதுப்பட்டியை சோ்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் தெரிவித்தது:

தக்காளி கிலோ ரூ.5 -க்கு விற்பனையாவதால் கூலித் தொழிலாளா்களுக்கு கூலி கூட தரமுடியாத நிலை உள்ளது. சிலா் காய்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனா். தக்காளிக்கு நிரந்தர விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.