தேனி மாவட்டம் கம்பத்தில் தீபாவளிப் பண்டிகை நெரிசலை தவிா்க்க தெற்கு போலீஸாா் கண்காணிப்புக் கோபுரங்கள், ஒருவழிப்பாதை போன்றவைகளை திங்கள்கிழமை அமைத்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையப்பகுதிக்கு உட்பட்ட வேலப்பா் கோவில் தெரு, காந்திஜி வீதி, அரசமரம்,போக்குவரத்து சிக்னல், பிரதான சாலை, காந்திஜி வீதி உள்ளிட்ட இடங்களில் தீபாவளிப் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி திருட்டு செயல்களில் ஈடுபடுவாா்கள். இதனை முன்னிட்டு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ். கீதா தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புக் கோபுரம், ஒரு வழிப்பாதை போன்றவைகளை அமைத்து வருகின்றனா்.