விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்தது: 5 பேர் காயம்

போடிமெட்டு மலைச்சாலையில் வியாழக்கிழமை மாலை ஜீப் கவிழ்ந்ததில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

News image
விபத்துக்குள்ளான ஜீப்.
Updated On :12 நவம்பர் 2020, 1:28 pm

DIN

போடிமெட்டு மலைச்சாலையில் வியாழக்கிழமை மாலை ஜீப் கவிழ்ந்ததில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

தேனி மாவட்டம், போடிமெட்டு மலை கிராமம் அருகே மணப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் முருகன் (65). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த சிலரும் போடியில் நடைபெற்ற வசந்த விழா நிகழ்ச்சிக்காக போடிக்கு வந்துவிட்டு மாலையில் ஜீப் மூலம் போடிமெட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். ஜீப்பை போடிமெட்டைச் சேர்ந்த புலிமுருகேசன்(52) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

போடிமெட்டு மலைச்சாலையில் தற்போது மேக மூட்டமாக காணப்படுவதால் வாகனங்கள் செல்லும்போது சிரமம் ஏற்பட்டு வந்தது. போடிமெட்டு சென்ற ஜீப்பும் 9 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே நிலை தடுமாறி பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் முருகன், புலிமுருகேசன், மணப்பட்டி கிராமத்தை சேர்ந்தச் முருகன் மனைவி காந்தாமணி (58) கண்ணன் மகன்கள் சிவபிரகாசம்(18), சுபாஷ் பாண்டியன் (20) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்து அறிந்து போடி தீயணைப்பு நிலைய வீரர்கள், போடி குரங்கணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முருகன் பலத்த காயமடைந்ததால் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து போடி குரங்கணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.