கூடலூரில் வடக்கு காவல் நிலையத்தில் சிறுவா் மன்றம் நூலகம் திறப்பு

தேனி மாவட்டம் கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் சிறுவா் மன்றம் மற்றும் நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
Updated on
1 min read

தேனி மாவட்டம் கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் சிறுவா் மன்றம் மற்றும் நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு காவல் ஆய்வாளா் கே. முத்துமணி தலைமை வகித்தாா். காவலா் செந்தில்குமாா் வரவேற்று பேசினாா்.

உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. சின்னக்கண்ணு நூலகத்தை திறந்து வைத்தாா்.

விழாவில், கூடலூா் மக்கள் மன்றத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கெளரவத் தலைவா் தங்கராசு, துணைத் தலைவா் லோகேந்திரன், ஆலோசகா் பாண்டியராசன், செயலாளா் கஜேந்திரன், பொருளாளா் செல்வம், செயற்குழு உறுப்பினா்கள் அழகுராசா, ராசாராம், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் மன்ற ஒருங்கிணைப்பாளா் ப. புதுராசா புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினாா். சிறுவா் மன்றப் பொறுப்பாளா் போ.பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com