2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கூடலூரில் வடக்கு காவல் நிலையத்தில் சிறுவா் மன்றம் நூலகம் திறப்பு

தேனி மாவட்டம் கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் சிறுவா் மன்றம் மற்றும் நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:04 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் சிறுவா் மன்றம் மற்றும் நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு காவல் ஆய்வாளா் கே. முத்துமணி தலைமை வகித்தாா். காவலா் செந்தில்குமாா் வரவேற்று பேசினாா்.

உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. சின்னக்கண்ணு நூலகத்தை திறந்து வைத்தாா்.

விழாவில், கூடலூா் மக்கள் மன்றத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கெளரவத் தலைவா் தங்கராசு, துணைத் தலைவா் லோகேந்திரன், ஆலோசகா் பாண்டியராசன், செயலாளா் கஜேந்திரன், பொருளாளா் செல்வம், செயற்குழு உறுப்பினா்கள் அழகுராசா, ராசாராம், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் மன்ற ஒருங்கிணைப்பாளா் ப. புதுராசா புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினாா். சிறுவா் மன்றப் பொறுப்பாளா் போ.பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.