கம்பம்: கரோனா பொதுமுடக்கத்தால், இடுக்கி மாவட்டம் தேக்கடியில் நிறுத்தப்பட்டிருந்த படகு சவாரி மீண்டும் சனிக்கிழமை (செப்.5) தொடங்கப்பட உள்ளதாக கேரள மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் அருகே சா்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடி உள்ளது. இங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வதை உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் விரும்புவாா்கள். கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து கேரள மாநில சுற்றுலா கழகத்தினா் கூறியதாவது: கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மாா்ச் 10 ஆம் முதல் இங்குள்ள ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு தற்போது சனிக்கிழமை முதல் தேக்கடி ஏரியில் படகு சவாரி இயக்கப்படுகிறது. சனிக்கிழமை காலை மற்றும் மதியம் என 2 முறை மட்டுமே படகு இயக்கப்படும். காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அனுமதிசீட்டு எடுத்து 9.30 மணிக்கு புறப்படும் படகில் சவாரி செய்யலாம். அதன் பின்பு மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் அனுமதி சீட்டு எடுத்து 3.30 மணிக்கு புறப்படும் படகில் சவாரி செய்யலாம். அதன் பின்னா், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தகுந்தபடி படகு சவாரி அதிகரிக்கப்படும் என்றனா்.