பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேக்கடியில் படகு சவாரி:6 மாதங்களுக்குப் பிறகு தொடக்கம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தேக்கடி ஏரியில் சனிக்கிழமை முதல் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

News image
தேக்கடியில் சனிக்கிழமை தொடங்கிய படகு சவாரி.
Updated On :5 செப்டம்பர் 2020, 5:35 pm

DIN

கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தேக்கடி ஏரியில் சனிக்கிழமை முதல் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட எல்லையிலுள்ள தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வதற்கு உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். ஆனால், கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட படகு சவாரியானது, 6 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அப்போது, 2 படகுகள் இயக்கப்பட உள்ளதாக கேரள மாநில சுற்றுலா கழகத்தினா் தெரிவித்தனா்.

அதன்படி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கும், பிற்பகல் 3.30 மணிக்கும் என 2 படகுகள் இயக்கப்பட்டன. இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே படகு சவாரி செய்தனா். சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணியவும், கிருமி நாசினி மூலம் கை கழுவவும் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றவும் சுற்றுலாத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.