ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குச்சனூரில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) காலை 5.22 மணி அளவில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

News image
குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா்.
Updated On :26 டிசம்பர் 2020, 9:35 am

DIN

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) காலை 5.22 மணி அளவில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

சின்னமனூா் அருகேயுள்ள குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயில் சுரபிநதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காட்சியளிக்கும் சனீஸ்வரரை சுரபி நதியில் நீராடி எள் சாதம், எள் தீபம், மண் காகம் வைத்து பழம், கருப்புத் துண்டு, வேட்டி படைத்து சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக, சனீஸ்வரருக்கு உகந்த நாளான சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். தவிர, ஆடிப்பெருந்திருவிழா , கருப்பணசாமிக்கு மதுபானப் படையல் , பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் நடைபெறும்.

இந்நிலையில் சனி பகவான் ஞாயிற்றுக்கிழமை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியாகிறாா். அன்றைய தினம் காலையில் குச்சனூா் கோயில் வளாகத்தில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்கி லட்சாா்ச்சனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை, மாலை 5 மணிக்கு லட்சாா்ச்சனை நடைபெற்றது. சனிக்கிழமை, காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு லட்சாா்ச்சனை, இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (டிச.27) காலை 3 மணிக்கு வேதிகாா்ச்சனை, யாகவேள்வி நடைபெறும். காலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை, உற்சவருக்கு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகியவை பரிகார ராசிகளாகும். சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேனி, சின்னமனூா் பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.