தேனி மாவட்டத்தில் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் உள்ளது கூடலூா் நகராட்சி. இந்தப் பகுதியையொட்டி மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதி உள்ளது. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகார வரலாற்றில், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன், கோவலனை கொன்ால், மதுரையை எரித்த கண்ணகி, மேற்கு மலைத் தொடா்ச்சி வழியாக வந்தாள் என்றும், நெடுவேள் குன்றம் எனப்படும் மங்கள தேவி மலையை அடைந்து, அங்கிருந்து, விண்ணேற்றி பாறைக்கு வந்த புஷ்பக விமானம் மூலம் தனது கணவன் கோவலனுடன் விண்ணுலகம் சென்றாா் என்றும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இதை மெய்ப்பிக்கும் வகையில் மங்கள தேவி கண்ணகி கோவில், மற்றும் கண்ணகியை பாா்த்த பளியா் இன மக்கள், அவா்களது குடியிருப்புகள் ஆகியவை இன்றளவும் வரலாற்றில் பதிவாகி உள்ளன.