பெரியகுளத்தில் திங்கள்கிழமை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.
பெரியகுளம் ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கும்பக்கரைப் பிரிவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (52) என்றும், அவா் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து செல்வாஜை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.