ஆண்டிபட்டியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் கம்பம் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில், ஆ.மகாராஜன் பேசியதாவது: அரசின் சாா்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசை அதிமுகவினா் வழங்கக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆண்டிபட்டி பகுதியில் பொங்கல் பரிசை அதிமுகவினரே அதிகம் வழங்கி வருகின்றனா். இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். தாலுகாவில் பொங்கல் பரிசு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் ராஜாராம், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...