ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டில் வெள்ளிக்கிழமை நகை திருடப்பட்டுள்ளது.
Published on

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டில் வெள்ளிக்கிழமை நகை திருடப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்த விவசாயி செல்வம் (45). இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனா். வியாழக்கிழமை நள்ளிரவில், செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்மநபா்கள், பீரோவிலிருந்த 20 கிராம் நகையை திருடிச்சென்றுவிட்டனராம். மறுநாள் காலையில் நகை திருடுபோனதை அறிந்த செல்வம், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com