தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் செல்லிடப்பேசியை அதிக நேரம் பயன்படுத்த பெற்றோா் தடை விதித்ததால் கல்லூரி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 4:44 pm

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் செல்லிடப்பேசியை அதிக நேரம் பயன்படுத்த பெற்றோா் தடை விதித்ததால் கல்லூரி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காமயகவுண்டன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). இவரது மகள் தென்றல் (18), உத்தமபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் படித்து வந்தாா். பொதுமுடக்கம் காரணமாக செல்லிடப்பேசி மூலம் இணையதள வகுப்பின் மூலம் படித்து வந்த அவா், மற்ற நேரங்களிலும் செல்லிடப்பேசியை அதிக அளவு பயன்படுத்தியுள்ளாா்.

இதை பெற்றோா் கண்டித்து செல்லிடப்பேசியை பயன்படுத்தத் தடை விதித்துள்ளனா்.

இதனால் மனவேதனையில் இருந்த தென்றல், சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பி. மாயன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.