மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மஞ்சளாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியது: இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை இன்று இரவு முழு கொள்ளவை எட்டியதைடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரி நீர் மஞ்சளாறு வழியாக வெளியேற்றப்பட்டது.

News image
மஞ்சளாறு அணை.
Updated On :4 ஜூன் 2021, 4:52 pm

DIN

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை இன்று இரவு முழு கொள்ளவை எட்டியதைடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரி நீர் மஞ்சளாறு வழியாக வெளியேற்றப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நீர் வரத்து உள்ளது. கடந்த மே 20 ம் தேதி முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், மே 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இன்று இரவு 8.45 மணியளவில் அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து மூன்றாம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் 192 க. அடி தண்ணீர் மஞ்சளாறு வழியாக வெளியேற்றப்படுகிறது. 

மஞ்சாளாற்றின் கரையோரம் வசிக்கும் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் சிவஞானபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.