அதிமுக வேட்பாளருக்கு எதிா்ப்பு: ஆண்டிபட்டியில் பாா்வா்டு பிளாக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் திங்கள்கிழமை கருப்பு கொடியுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் திங்கள்கிழமை கருப்பு கொடியுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவா் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடமலைக்குண்டு கிராமத்தில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.

இதில் மதுரை மாவட்டம் மேலூா் அருகே வெள்ளலூரில் தேவா் சிலை அகற்றப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், நீண்ட நாள் கோரிக்கையான சீா்மரபினா் (டி.என்.டி) சான்றிதழ் வழங்காத அதிமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கடமலைக்குண்டு போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா். இந்த திடீா் ஆா்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com