தேனி: சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடக்கம்
வடவீரநாயக்கன்பட்டியில் தமிழக அரசு உத்தரவின்பேரில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.


வடவீரநாயக்கன்பட்டியில் தமிழக அரசு உத்தரவின்பேரில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டியில், கரோனா தொற்றாளர்களுக்காக சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு, பிரமானந்த பைரவ மாத்திரை மற்றும் அமுக்கரா மாத்திரை இருமல், இரைப்பிற்கு ஆடாதோடை மணப்பாகு, திரிகடுகு சூரணம், தாளிசாதி சூரணம் கொடுக்கப்படுகிறது.
கடின மூச்சிற்கு திப்பிலி ரசாயனம், வயிற்றுப் போக்கிற்கு ஓமத்தீநீர், மூக்கடைப்பு மற்றும் மணமின்மைக்கு வசந்த குசுமாகர மாத்திரை, போன்ற மருந்துகள் வழங்கப்படும். சிறுவர் சிறுமிகளுக்கு என பால சஞ்சீவி மாத்திரை, உரை மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், போன்ற மருந்துகள், அவர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது. சித்த மருத்துவ சிகிச்சை பணியில் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவர் சிராஜ் தீன், மருத்துவர் நவீன் குமார் 4 செவிலியர்கள், 15 அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் காலையில் சித்த யோகப்பயிற்சி, காந்தி சுட்டிகை என்னும் சூரியக்குளியல், மாலையில் எளிய நடைப்பயிற்சி, இரவில் தினம் ஒரு பாடம், உடல்நல மனநலக் கல்வி, உடல் தகுதியை நிர்வாகித்தல், சிகிச்சை பிறகு உடலை பராமரித்தல், சித்த மருத்துவ உணவியல் வாழ்வியல் பயிற்சிகள், மனம் விட்டு பேசும் நிகழ்ச்சிகள், வாழ்வியல் நோய்கள் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் தினம் ஒரு பாடம் தொற்றாளர்களுக்கு நடத்தப்படும் என்று சித்த மருத்துவர் சிராஜுதீன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...