ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஆறுதல் தெரிவித்தனர்.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஆறுதல் தெரிவித்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிப்பால் இறந்தார். இது குறித்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி பண்ணை வீட்டில் இன்று தங்கியிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்மொழித்தேவன், வானூர் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் அர்ஜுனன், கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு, உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...