/

போடியில் அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

போடியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அமமுக சாா்பில் வியாழக்கிழமை, கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:03 am

DIN

போடியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அமமுக சாா்பில் வியாழக்கிழமை, கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு சமீபத்தில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தியது. இந்த வரி உயா்வைக் கண்டித்தும், சொத்து வரி உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் போடி வ.உ.சி. சிலை திடலில் அமமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் முத்துசாமி தலைமை வகித்தாா். போடி நகர செயலா் ஞானவேல் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் முந்தல் மணி, வழக்குரைஞா் சந்திரசேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.