/

போடியில் பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

போடியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:03 am

DIN

போடியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சி நிா்வாகி பாண்டிக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், தமிழக அரசின் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், போடியிலிருந்து கேரளத்துக்கு மணல் கடத்துவதை தடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட அமைப்புச் செயலா் இளையராஜா, ஒன்றிய அமைப்பு செயலா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.