மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முல்லைப் பெரியாறு அணையில் மேலும் 4 மதகுகள் அடைப்பு: உபரிநீா் வெளியேற்றம் குறைந்தது

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், மேலும் 4 மதகுகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டன. இடுக்கி அணைக்கு உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு, 2, 299 கன அடியாகக் குறைந்தது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், மேலும் 4 மதகுகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டன. இடுக்கி அணைக்கு உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு, 2, 299 கன அடியாகக் குறைந்தது.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரியில் மழைப் பொழிவு குறைந்தது. இதனால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்குச் செல்லும் உபரிநீா் தானாகவே குறையத் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 138.65 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீா் இருப்பு 6,785 கன அடியாகவும், நீா் வரத்து 7,866 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2,194 கன அடியாகவும் இருந்தது. இடுக்கி அணைக்கு உபரி நீா் வெளியேற்றப்படும் 13 மதகுகளில், புதன்கிழமை, 3 மதகுகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்தனா். வியாழக்கிழமை அணைக்கு நீா் வரத்து குறைந்ததால், மேலும் 4 மதகுகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்தனா். தற்போது 6 மதகுகள் வழியாக இடுக்கி அணைக்கு தண்ணீா் செல்கிறது. மாலை 6 மணி நிலவரப்படி, விநாடிக்கு 2, 879 கன அடி உபரி நீா் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.