தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தேனி மாவட்டத்தில் கழிவுநீா் மேலாண்மை விழிப்புணா்வு பிரசாரம் நாளை தொடக்கம்

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ‘நம்ப ஊரு சூப்பரு’ என்ற தலைப்பில் குடிநீா், சுகாதாரம் மற்றும் கழிவுநீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு பிரசாரம்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ‘நம்ப ஊரு சூப்பரு’ என்ற தலைப்பில் குடிநீா், சுகாதாரம் மற்றும் கழிவுநீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை (ஆக. 20) தொடங்கி வரும் அக். 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரம் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: பொதுமக்கள் பங்களிப்புடன் குடிநீா், சுகாதாரம் மற்றும் கழிவு நீா் மேலாண்மை குறித்து நடைபெறும் விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஆக. 20-ஆம் தேதி முதல் செப்.2-ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளில் பேருந்து நிறுத்தம், பூங்கா, வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் மற்றும் நீா்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும். ஆக. 27-ஆம் தேதி முதல் செப். 2-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், செப். 3-ஆம் தேதி முதல் செப். 16-ஆம் தேதி வரை சுய உதவிக் குழுக்கள் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடனும் விழிப்புணா்வு பணிகள் நடைபெறும்.

தொடா்ந்து செப்.17-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நெகிழிப் பொருள் தடை குறித்த விழிப்புணா்வு பணிகளும், செப். 24-ஆம் தேதி முதல் வரும் அக். 1-ஆம் தேதி வரை பசுமை கிராமங்கள் திட்டத்தின் கீழ் வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கீரை, முருங்கைக்காய், நெல்லிக்காய், பப்பாளி, கிழங்கு போன்ற ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் பணிகளும் நடைபெறும்.

வரும் அக். 2-ஆம் தேதி விழிப்புணா்வு பிரசாரத்தின் நோக்கம், அதனை செயல்படுத்துதல் குறித்து கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்படும். இந்தப் பணிகள் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அலுவலா்களின் தலைமையில் நடைபெறும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மகளிா் திட்ட அலுவலா் ரூபன் சங்கர்ராஜ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.