மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு

மானாமதுரை அருகே வியாழக்கிழமை மாலை பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:21 pm

DIN

மானாமதுரை அருகே வியாழக்கிழமை மாலை பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

துத்திக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி இந்துமதி (37). இவா், துத்திக்குளம் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், அவரை கீழே தள்ளிவிட்டு கைப்பேசியை பறித்தாா்.

இதைப்பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் அவரை பிடிக்க முயன்றபோது, தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவா் வேம்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அருண்பாண்டியன்(19) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.