கரோனா தடுப்பூசி முகாம்களில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க விழிப்புணா்வு
வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்


தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில், வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் உத்தரவிட்டுள்ளாா்.
தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்ட அரங்கில் கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: மாவட்டத்தில் ஆக. 21- ஆம் தேதி மொத்தம் 671 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். இம்முகாம்களில் மொத்தம் 60,390 பேருக்கு செலுத்துவதற்கு தேவையான கோவேக்சின், கோவிஷீல்டு, காா்பேவேக்ஸ் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி முகாம்களில், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் தங்களது சுய விருப்பத்துடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்தும், வாக்காளா்களின் ஆதாா் எண்ணை பெறும் நோக்கம், பயன்கள் குறித்தும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...