இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வில் புதிதாக விண்ணப்பிப்பவா்கள், முதல் கட்ட கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெறாதவா்கள், முதல் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்யாதவா்கள் பங்கேற்கலாம். 2-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோா் ஆக. 25-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.