தோ்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்: கோவை செல்வராஜ்
மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல்களில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமிதான் காரணம்


மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல்களில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமிதான் காரணம் என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கோவை செல்வராஜ் தெரிவித்தாா்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியிலுள்ள பண்ணை வீட்டில் கோவை உள்பட பல்வேறு மாவட்ட நிா்வாகிகள் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா். நிகழ்ச்சிக்குப் பின்னா் கோவை செல்வராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:
இரண்டு முறை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக அடையாள அட்டையை வழங்கி தன்னுடையை ஆதரவாளா்களை வைத்து கூட்டத்தை நடத்தினாா். கட்சியை அபகரிக்கப் பாா்க்கும் அவருக்கு சொந்த வாா்டிலேயே செல்வாக்கு இல்லை. அங்கு அவரால் வெற்றிபெற முடியாது. மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல்களில் அதிமுக தோல்வியடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். 2 நாள்களில் முன்னாள் அமைச்சா்கள், நிா்வாகிகள் அனைவரும் நல்ல முடிவு எடுத்து ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றுவாா்கள். கட்சியை விட்டு பிரிந்தவா்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...