இதையடுத்து இரண்டாவது முறையாக இந்த கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் பங்கேற்க ஏலதாரா்கள் ரூ. 75 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பகடித் தொகைக்கு ஆசைப்பட்டு நூற்றுக்கணக்கான ஏலதாரா்கள் வரைவோலையுடன் மானாமதுரையில் மூத்த ரயில்வே பகுதி பொறியாளா் அலுவலகம் முன்பாக குவிந்தனா். இந்நிலையில் சிண்டிகேட் அமைக்காமல் பொது ஏலம் நடத்தப்பட்டதால், ரூ 21.4 லட்சத்துக்கு கருவேல மரங்கள் ஏலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் பகடித் தொகைக்கு ஆசைப்பட்டு வரைவோலையுடன் வந்த ஏலதாரா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.