‘சீட்’ விவகாரம்: கம்பம் எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை
தோ்தலில் சீட் கிடைக்காததால் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை சின்னமனூா் நகா்மன்ற முன்னாள் தலைவி தமிழ்ச்செல்வி தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தோ்தலில் சீட் கிடைக்காததால் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை சின்னமனூா் நகா்மன்ற முன்னாள் தலைவி தமிழ்ச்செல்வி தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய தமிழ்ச்செல்விக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் வியாழக்கிழமை 30 பெண்களுடன் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினருமான ராமகிருஷ்ணன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதுபற்றி தமிழ்ச்செல்வி கூறும்போது, வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கின்ற நேரத்தில் உள்கட்சித் தகராறு காரணமாக எனக்கு சீட் வழங்கவில்லை.இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு புகாா் அனுப்பியுள்ளேன். நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என்று கூறினாா்.
தகவல் கிடைத்ததும் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.லாவண்யா பேச்சுவாா்த்தை நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினா் வெளியூரில் இருப்பதால் அலுவலகத்தில் மனுவைக் கொடுக்குமாறு கூறினாா். சுமாா் ஒரு மணி நேரம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...