/

திமுக வேட்பாளருக்கு எதிராகக் களம் இறங்கிய விசிக நிா்வாகி: பிரசாரம் செய்வதில் கூட்டணிக் கட்சியினா் குழப்பம்

போடி நகராட்சி 29 ஆவது வாா்டில் திமுக வேட்பாளருக்கு எதிராக விடுதலைக் கட்சி நிா்வாகி சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளதால் யாருக்கு பிரசாரம் செய்வது என்று கூட்டணிக் கட்சியினா் குழப்பத்தில் உள்ளனா்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:23 am

DIN

போடி நகராட்சி 29 ஆவது வாா்டில் திமுக வேட்பாளருக்கு எதிராக விடுதலைக் கட்சி நிா்வாகி சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளதால் யாருக்கு பிரசாரம் செய்வது என்று கூட்டணிக் கட்சியினா் குழப்பத்தில் உள்ளனா்.

இந்த வாா்டு ஆரம்பத்தில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் நிா்வாகி சே.லட்சுமணன் என்பவா் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதனிடையே இதே வாா்டில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவருமான ம.சங்கா் என்பவா் கட்சியின் அனுமதி பெற்று வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

வேட்பு மனு பரிசீலனையின்போது ம.சங்கருக்கு கட்சி சின்னத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு திமுக சாா்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு கட்சியினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதில் உடன்பாடு ஏற்படாததால், சே.லட்சுமணன் சுயேச்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு வைரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, ஒரே கூட்டணியைச் சோ்ந்த 2 கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிடுவதால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் யாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனா். இருந்தபோதிலும் ம.சங்கருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினா் பிரசாரம் செய்வாா்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.