பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மனநோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


பெரியகுளத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மனநோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரியகுளத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநோயாளிகளுக்கான தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு போடியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் ( 35 ) அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.இந்நிலையில், இவா், மனநோயாளி பிரிவு பகுதியிலுள்ள சுகாதார வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...