தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேனி அருகே ஒரே பள்ளியில் 12 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று

 தேனி அருகே பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை, 12 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

 தேனி அருகே பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை, 12 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட நிலையில், அவா்கள் மற்றும் அவா்களது வகுப்பறையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 12 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பள்ளி மூடல்: 12 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி மூடப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களிடம் கபம் மாதிரி சேகரிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.