இதுகுறித்து நகராட்சி ஆணையா், காவல் ஆய்வாளா் மற்றும் போக்குவரத்து மேலாளா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் காந்தி சிலை, மாா்க்கையன்கோட்டை விலக்கு, தேரடி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய 4 முக்கிய நிறுத்தங்கள் இருந்தன. இதில், தேரடி பேருந்து நிறுத்ததில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் ஜூலை 20 ஆம் தேதி முதல் அப்பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காது. எனவே பேருந்து நிலைய நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.