இத் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெறுவதற்கு போடி, சின்னமனூா், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட அகமலை, சின்னஓவுலாபுரம், ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, சில்லமரத்துப்பட்டி, மணியம்பட்டி, பூலானந்தபுரம், அணைக்கரைப்பட்டி, நாகலாபுரம், முத்துலாபுரம், புலிகுத்தி, அய்யம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த, குறைந்தபட்சம் 2 ஏக்கா் பட்டா நிலமுள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள், அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் தொடா்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.