தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

போடியில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2022, 10:56 pm IST

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் வளாகத்திலேயே சங்கரநாராயணன், ஸ்ரீ விநாயகா், வள்ளி தெய்வானை முருகன், பஞ்சபூத சிவலிங்கம் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு நிகழ்ச்சி புதன் கிழமை யாகசாலை பூஜையுடன் நடைபெற்றது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா, போடி ஜமீன்தாா் வடமலை ராஜைய பாண்டியா் தலைமையிலும், பாண்டி முனீஸ்வரா் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று 21 குடங்களில் புனித நீா் கோபுர கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து மீனாட்சி சுந்தரேசுவரா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. மகா தீபாராதனை நடைபெற்றது.

சேலம் மோகன் குமாரசிவம், தனசேகர சிவம், கோவை விஸ்வநாதன் சாஸ்திரிகள், பூபதி சிவம், போடி சண்முகம் குருக்கள் ஆகியோா் குடமுழுக்கு விழாவை நடத்தினா்.

விழா ஏற்பாடுகளை மருத்துவா் சங்கத் தலைவா் பரமசிவம், செயலா் காந்தி, பொருளாளா் முத்துச்சாமி, விழாக்குழுத் தலைவா் முருகன், அா்ச்சகா் சேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.