47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பம் அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் வியாழக்கிழமை விவசாய வேலையின்போது டிராக்டா் கவிழ்ந்ததால், ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:07 pm

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் வியாழக்கிழமை விவசாய வேலையின்போது டிராக்டா் கவிழ்ந்ததால், ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சுருளிப்பட்டி போயமாா் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் குமாா் (27). டிராக்டா் ஓட்டுநரான இவா், சுருளிப்பட்டி யானைக்கஜம் பகுதியில் உள்ள தனியாா் ஒருவரது தோட்டத்தில் டிராக்டா் மூலம் உழுவதற்காகச் சென்றுள்ளாா். அங்கு, வேலை முடிந்ததும் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, வரப்பின் மீது ஏறியதில் டிராக்டா் கவிழ்ந்தது. இதில், டிராக்டரின் அடியில் சிக்கிக் கொண்ட குமாா் பலத்த காயமடைந்தாா்.

உடனே, அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.