கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மருத்துவர் வர தாமதமானதால் பயனாளிகள் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள உத்தமபுரம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் மாற்றுத்தறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் கலந்து கொள்ள ஆண், பெண், மாற்று திறனாளிகள் காலை 8 மணி முதலே வரத்தொடங்கினர். இவர்களை பரிசோதித்து இவர்களது உடல் ஊனம் எத்தனை சதவீதம் என்று குறித்து அடையாளப்படுத்துவது மருத்துவர் என்பதால் அவருக்காக காத்திருந்தனர்.
சுமார் 12 மணி ஆகியும் மருத்துவர் வரவில்லை. இதனால் ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் அவதி அடைந்தனர். மருத்துவரைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் முகாமில் ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கமிட்டனர்.
அங்கிருந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா அவர்களிடம் கூறும்போது, இரவு பணி காரணமாக மருத்துவர் வர தாமதமாகியுள்ளது, வந்துவிடுவார் என்று சமாதானப்படுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் திடீரென்று அதன் பயனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பூர்வ நோட்டீஸ் குறித்து பதிவு செய்யும்படி படிவத்தில் கோரப்படவில்லை: மீனாட்சி நடராஜன்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

முடிவுக்கு வரும் ஈரான் - அமெரிக்கா போர்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
விடியோக்கள்

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



