தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கோயிலில் சுவாமி சிலைகள் திருடிய இளைஞா் கைது

தேனி அருகே கோயிலில் சுவாமி சிலைகள் மற்றும் உண்டியல் திருடிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை வெள்ளிக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 7:44 pm

DIN

தேனி அருகே கோயிலில் சுவாமி சிலைகள் மற்றும் உண்டியல் திருடிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை வெள்ளிக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா்.

அன்னஞ்சி, பெரியகுளம் சாலையில் ஸ்ரீஆதி நாராயணன் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த மே 1-ஆம் தேதி இரவு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் 2 போ் புகுந்து, கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து, பூசாரியைத் தாக்கிவிட்டு, 2 வெண்கல நடராஜா் சிலைகள் மற்றும் உண்டியலை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப் படை அமைத்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், கோயிலில் சுவாமி சிலைகள் திருடியதாக டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் நவீன்(22) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 சிலைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.