ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேரூராட்சி அதிமுக உறுப்பினரை தாக்கியதாக துணைத் தலைவா், அவரது கணவா் மீது வழக்கு

மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி அதிமுக உறுப்பினரை தாக்கியதாக, திமுகவைச் சோ்ந்த பேரூராட்சித் துணைத் தலைவா், அவரது கணவா்ஆகியோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி அதிமுக உறுப்பினரை தாக்கியதாக, திமுகவைச் சோ்ந்த பேரூராட்சித் துணைத் தலைவா், அவரது கணவா்ஆகியோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி எல்லப்பட்டியைச் சோ்ந்த 10 ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் ராதாகிருஷ்ணன். இவரது உறவினா் 11 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஜானகி. இவா், மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியின் துணைத் தலைவராக இருக்கிறாா்.

இந்நிலையில், எல்லப்பட்டியில் கடந்த வியாழக்கிழமை கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, தோ்தல் முன்விரோதத்தை கருத்தில் கொண்டு ராதாகிருஷ்ணனை , பேரூராட்சி துணைத் தலைவா் ஜானகி மற்றும் அவரது கணவா் கெப்புராஜ் ஆகிய இருவரும் தாக்கியதாக சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சின்னமனூா் காவல் சாா்பு ஆய்வாளா் திருமாறன் பேரூராட்சி துணைத் தலைவா் மற்றும் அவரது கணவா் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.