தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூடலூர் காளியம்மன் கோயில் திருவிழா கொடி கம்பம் நாட்டப்பட்டது

தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன் கிழமை கொடி கம்பம் நாட்டப்பட்டது.

News image
Updated On :11 மே 2022, 8:07 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன் கிழமை கொடி கம்பம் நாட்டப்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூரில்  அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா வரும் மே 17,18 ஆகிய இரண்டு நாள்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், அரிவாள் எறி அருள்வாக்கு கூறும் நிகழ்வு உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது. பொங்கல் விழாவிற்காக புதன் கிழமை கொடி கம்பம், கோயில் வளாகத்தில் நாட்டப்பட்டது.

முன்னதாக கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருந்ததியர் சமுதாய பொறுப்பாளர்கள்  செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.