/

பெரியகுளம் அருகே வெடிபொருள்கள் வைத்திருந்தவா் கைது

பெரியகுளம் அருகே சட்ட விரோதமாக வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

பெரியகுளம் அருகே சட்ட விரோதமாக வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே ஏ. புதுப்பட்டியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனைநடத்தினா். இதில், ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் (49) என்பவரது வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, வெடிபொருகள்களை பறிமுதல் செய்ததுடன், சுரேஷையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.