தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், கண்புரை நோய் அறுவை சிகிச்சைக்காக 21 போ் தோ்வு செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களுக்கு, சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் ஆலோசனையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்தினாா். முகாமுக்கான ஏற்பாடுகளை கண் மருத்துவ உதவியாளா் வெங்கடேசன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.