பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆற்றில் மூழ்கிய கட்டடத் தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

 தேனி மாவட்டம் கூடலூா் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாறு ஆற்றுப் பாலம் அருகே வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட கட்டடத் தொழிலாளி

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 தேனி மாவட்டம் கூடலூா் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாறு ஆற்றுப் பாலம் அருகே வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட கட்டடத் தொழிலாளியை தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் தேடிவருகின்றனா்.

கூடலூா் சுள்ளக்கரையைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் சிவா (32). இதே ஊரைச் சோ்ந்தவா் முத்தையா மகன் பரமசிவம் (33). இருவரும் கட்டடத் தொழிலாளிகள். இவா்கள் இருவரும் நண்பா்கள் என்பதால் வியாழக்கிழமை மாலை மது அருந்தி விட்டு, காஞ்சிமரத்துறை பாலம் அருகே முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது சிவா ஆற்றின் மறுகரையை கடக்க முயன்ற போது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதை பாா்த்தவா்கள் கூடலூா் தெற்கு காவல் நிலையத்துக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் ஆற்றில் மூழ்கிய சிவாவை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.