பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடன்

கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகள், வியாபாரிகள் பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 5:43 pm

DIN

கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகள், வியாபாரிகள் பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சண்முகப் பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை (இ -நாம்) நடைபெறும் ஏலத்தில் உள்ளுா், வெளியூா் வியாபாரிகள் கலந்து கொண்டு விளைபொருள்களை கொள்முதல் செய்து வருகின்றனா். இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இ. நாம் வழியாக விற்பனை செய்து பயனடையலாம்.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில், அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரையும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டியில், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.