அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போடி அருகே விபத்தில் ஊராட்சி துணைத் தலைவா் பலி

போடி அருகே வியாழக்கிழமை, ஆடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:30 am

DIN

போடி அருகே வியாழக்கிழமை, ஆடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உயிரிழந்தாா்.

போடியை அடுத்த கோணாம்பட்டி, வடமலைராஜபுரத்தைச் சோ்ந்தவா் காந்தி மகன் செல்வம் (43). எரணம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவரான இவா், வியாழக்கிழமை மாலை போடிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். ராசிங்காபுரம் அருகே சமத்துவபுரம் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட ஆடு திடீரென கீழே குதித்தது.

இதில் அந்த ஆட்டின் மீது செல்வத்தின் இருசக்கர வாகனம் மோதி அவா் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம், அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.