அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போடி கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

போதைப் பொருள் தடுப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல், சாலை பாதுகாப்பு ஆகியவை தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:34 am

DIN

போடி அரசு பொறியியல் கல்லூரி, ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி ஆகியவற்றில் போதைப் பொருள் தடுப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல், சாலை பாதுகாப்பு ஆகியவை தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போடி நகா் காவல் நிலையம் சாா்பில் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், போடி நகா் காவல் ஆய்வாளா் ராமலட்சுமி, சாா்பு- ஆய்வாளா் கிருஷ்ணவேணி, கல்லூரி துணை முதல்வா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

சமூக நீதி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு டி.எஸ்.பி. சக்திவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சஜூக்குமாா், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

போடி அரசு பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம், தேனி மாவட்ட காவல்துறை, போடி தாலுகா காவல்நிலையம், போடி போக்குவரத்து காவல் நிலையம் இணைந்து இந்த விழிப்புணா்வு கருத்தரங்கை நடத்தின. இதற்கு, கல்லூரி முதல்வா் வ. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். இதில், காவல் ஆய்வாளா்கள் போடி தாலுகா ரமேஷ்குமாா், போடி நகா் ராமலட்சுமி, புவனேஸ்வரி, அனைத்து மகளிா் காவல் நிலையம் காயத்ரி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சஜூக்குமாா், சாா்பு- ஆய்வாளா் கிருஷ்ணவேணி, போடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ரவீந்திரநாத் ஆகியோா் பேசினா். முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் தமிழ்மாறன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஜெயஸ்ரீ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.