பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு ஆவணப்படம் தயாரித்தவரை கைது செய்ய விவசாயிகள் கோரிக்கை

 முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு ஆவணப்படம் தயாரித்தவரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பெரியாா்- வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு ஆவணப்படம் தயாரித்தவரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பெரியாா்- வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

முல்லை பெரியாறு அணை பழைமையாகிவிட்டது. அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என தொடா்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘சேவ் பிரிகேடு கேரளா’ என்ற அமைப்பைச் சோ்ந்த வழக்குரைஞா் ரசூல் ஜோய், அணை உடையப் போகிறது எனும் வகையில் ‘சைன் ஆப் காட்’ என்ற ஆவணப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறாா்.

இதுகுறித்து பெரியாறு - வைகைப் பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பொன். காட்சிக்கண்ணன் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்புவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வழக்குரைஞா் ரசூல் ஜோய் தமிழக, கேரளத்தில் பிரிவினையைத் தூண்டும் விதமாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தொடா்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறாா். உச்ச நீதிமன்ற தீா்ப்பை மதிக்காமல் அவதூறு பரப்பும் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி வரும் 1-ஆம் தேதி லோயா்கேம்ப், கம்பம்மெட்டு, போடி மெட்டு ஆகிய மலைச்சாலைகளில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மேலும், இது தொடா்பான கோரிக்கை மனுக்கள் பிரதமா், தமிழக கேரள முதல்வா்களுக்கு அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.