பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாய்க்காலில் குளித்தவரிடம் தங்கச் சங்கிலியை திருடிய இளைஞா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வாய்க்காலில் குளித்தவரிடம் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 6:44 pm

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் வாய்க்காலில் குளித்தவரிடம் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் 33-ஆவது வாா்டைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காா்த்திக் ராஜா (30). இவா், கம்பம் பிரதான சாலையில் உள்ள பலசரக்கு கடையில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், கடந்த திங்கள்கிழமை குளிப்பதற்காக சட்ரஸ் வாய்க்காலுக்கு சென்றாா். அங்கு ஆடைகளை கரையில் கழற்றி வைத்து விட்டு குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த, சா்ச் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சுந்தா் (25), கரையில் இருந்த காா்த்திக் ராஜாவின் சட்டைப் பையிலிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு ஓடினாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.